sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பருவமழையை எதிர்கொள்ள 125 முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்

/

பருவமழையை எதிர்கொள்ள 125 முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்

பருவமழையை எதிர்கொள்ள 125 முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்

பருவமழையை எதிர்கொள்ள 125 முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்


ADDED : அக் 14, 2025 04:13 AM

Google News

ADDED : அக் 14, 2025 04:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு தொடர்பாக மாரியம்மன் தெப்பக்குளத்தில் பேரிடர் மீட்பு மாதிரி ஒத்திகை நடந்தது.

தீயணைப்பு தென்மண்டல துணைஇயக்குனர் ராஜேஷ்கண்ணன், மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன், கூடுதல் அலுவலர் சுரேஷ்கண்ணன் தலைமையில் நகர், தல்லாகுளம், அனுப்பானடி தீயணைப்பு வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒத்திகையில் ஈடுபட்டனர். கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.

அவர் கூறியதாவது: மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நகரில் 78, புறநகரில் 47 என 125 முகாம்கள் ஏற்படுத்தப்படும். 300 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுவர்.

அனைத்து மழைநீர் கால்வாய்களும் துார்வாரும் பணி நடந்துள்ளது. மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை கண்டறிந்துள்ளோம். மேகவெடிப்பு ஏற்பட்டால் கூட அதை சமாளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us