நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மேலுார் கல்லம்பட்டி கிராமத்தில் வேளாண்மை துறையால் மேற்கொள்ளப்படும் 'டிஜிட்டல் கிராப் சர்வே' பணிகளில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் பணியை டீன் மகேந்திரன் ஆய்வு செய்தார்.
தோட்டக்கலை துறைத்தலைவர் ஆனந்தன், விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் சீனிவாசன் உடனிருந்தனர். தோட்டக்கலை, பூச்சியியல் துறை இணை பேராசிரியர்கள் அருளரசு, சுரேஷ் ஒருங்கிணைத்தனர்.