ADDED : மார் 16, 2026 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரியில் 2023ம் ஆண்டு படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். தலைவர் பன்சிதர், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், சரவணன், ராமசுப்பிரமணியன், முரளிதாஸ் பங்கேற்றனர். வழக்கறிஞர் ஜனார்த்தனன், 321 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில், ''தொடர்ந்து படிப்பது வாழ்க்கையை சிறப்பாக வழி நடத்தும். உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். மாறிவரும் தொழில் நுட்பங்களை மாணவர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்'' என்றார். முதல்வர் ஸ்ரீனிவாசன் வாசிக்க பட்டம் பெற்றோர் உறுதிமொழி ஏற்றனர்.

