ADDED : மார் 16, 2026 05:53 AM

பேரையூர்: பேரையூர் பகுதியில் புளியம்பழம் சீசன் துவங்கி உள்ளதால், மரங்களில் கொத்து கொத்தாக காய்த்துள்ளன.
புளியம்பழம் சீசன் மார்ச் - ஜூன் வரை இருக்கும். இந்த மாதங்களில் புளியம் பழம் அறுவடை தீவிரமாக நடைபெறும். இதற்காக மரங்களில் இருந்து பழங்களை உதிர்த்து சேகரிப்பர்.
சேகரித்த பழங்களில் விதைகளை நீக்கி, வெயிலில் காயவைத்து ஓராண்டுக்கு சேமித்து வைப்பர்.
பேரையூர் பகுதி ரோட்டோரம் பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு சொந்தமான புளிய மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்தாண்டு புளிய மரத்தில் அதிக அளவில் பழங்கள் காய்த்து தொங்குகின்றன.
இவற்றை உள்ளாட்சி அமைப்புகள் தனியாருக்கு ஏலம் விட்டு வருமானம் பார்க்கின்றன. புளியம் பழங்களை பொதுமக்கள் வாங்கி அதன் ஓடுகளை அகற்றி வெயிலில் காயவைத்து அதில் உள்ள விதையை எடுத்து இருப்பு வைக்கின்றனர். இவற்றை ஓராண்டுக்கு பயன்படுத்துகின்றனர்.

