ADDED : ஜன 09, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுா : வெள்ளரிபட்டியில் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் வந்தவர் நிலைத் தடுமாறி கீழே விழுந்து இறந்தார்.
ஹெல்மெட் அணியவில்லை. அவரது அலைபேசியில் மேலுார் எஸ்.ஐ., பழனியப்பன் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசியவர், 'அது என் அலைபேசி. பர்சுடன் தொலைந்து விட்டது' என்றார். டூவீலர் பதிவெண்ணை வைத்து விசாரித்த போது ஈரோடு ரமேஷ் என்ற பெயரில் முகவரி இருப்பது தெரிந்தது. இறந்தவர் யார், திருட்டில் தொடர்பு உடையவரா என விசாரைண நடக்கிறது.