ADDED : ஜன 02, 2025 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: மதுரை மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக பணிபுரிந்தவர் ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த விஸ்வநாத் 46. நேற்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் துக்க வீட்டிற்கு டூ வீலரில் சென்று திரும்பினார்.
மாலை 5:00 மணியளவில் உசிலம்பட்டி மாதரையை கடந்து வந்த போது உசிலம்பட்டியில் இருந்து தொட்டப்பநாயக்கனூர் சென்ற லோடுவேன் மோதியதில் உயிரிழந்தார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.