/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில் காளைகளால் பாதிக்கப்படும் பயிர்கள்
/
கோயில் காளைகளால் பாதிக்கப்படும் பயிர்கள்
ADDED : ஜூலை 27, 2025 04:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கொட்டகுடியில் கோடை விவசாயமாக நெல், வாழை, கரும்பு, கத்தரி பயிரிட்டுள்ளனர். இதை கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட காளைகள் சாப்பிடுவதால் விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாயி குருமூர்த்தி: இரவு பகலாக வயலில் காத்து கிடந்தும் காளைகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. சொசைட்டியில் வாங்கிய கடன்களை கட்ட முடியாத நிலை உள்ளது.
தாசில்தார் ஆய்வு செய்து கோயில் காளைகளை ஏலம் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

