ADDED : செப் 23, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : இளம் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு கோடி மரம் நடும் திட்டத்தில், மதுரை அழகர் கோவில் சர்வேயர் காலனி கொடிகுளம் முதல் கடச்சனேந்தல் வரை 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
காதக்கிணறு ஊராட்சி துணைத் தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மேலுார் அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் போஸ், இளங்கோவன், சதீஷ் பங்கேற்று மரக்கன்றுகள் நடவு செய்தனர். இளம் மக்கள் இயக்க நிறுவனர் திருச்சோழன் குபேந்திரன் ஒருங்கிணைத்து, 92 ஆயிரமாவது மரக்கன்றை நட்டார்.