sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அழகர்கோவிலில் பக்தர்கள் கூட்டம்

/

அழகர்கோவிலில் பக்தர்கள் கூட்டம்

அழகர்கோவிலில் பக்தர்கள் கூட்டம்

அழகர்கோவிலில் பக்தர்கள் கூட்டம்


ADDED : டிச 30, 2024 06:46 AM

Google News

ADDED : டிச 30, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இந்தாண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

மார்கழி மாதம் முதல்நாள் முதல் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கும்போதே பல்வேறு ஊர்களில் இருந்து திரளாக வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று (டிச.29) கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நடந்த 'மார்கழி இசை சங்கம' நிகழ்ச்சியில் செய்யாறு மீனாட்சி நாட்டியாலயா, திருநெல்வேலி கலைமகள் நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம் நடந்தன.

பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதியில் குவிந்த பக்தர்கள் பொங்கல் வைத்தும், அரிவாள் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குழுவாக வந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி, சமைத்து, அன்னதானம் வழங்கினர்.

சபரிமலை ஐயப்பன், பழநி முருகனுக்கு மாலை அணிந்தபக்தர்கள்அழகர்மலை மீதுள்ள சோலைமலை முருகன், ராக்காயி அம்மனைதரிசித்தனர்.

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் சமீபத்தில் துவங்கிய நிலையிலும், பக்தர்கள் அன்னதான மண்டபத்தில் காத்துக் கிடக்கின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக மண்டபம் அருகே கோயில் நிர்வாகம் சார்பில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''தினமும் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஒரு அமர்வில் 100 பேர் வீதம் 45 முதல் 50 நிமிடங்களுக்கு ஒருமுறை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்'' என்றார்.






      Dinamalar
      Follow us