ADDED : செப் 29, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : பண்ணிவீரன்பட்டி விவசாயி கருப்பசாமி. இவரது மனைவி சிநேகா 22. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் சிநேகாவிற்கு நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.
'108' ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாப்பாகுடிபட்டி அருகே பிரசவ வலி அதிகரிக்கவே மருத்துவ நுட்புனர் மகாலட்சுமி, டிரைவர் நந்தீஷ்குமார் பிரசவம் பார்த்தனர். பெண் குழந்தை பிறந்தது. கீழவளவு அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.