/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொசுக்கடியால் துாக்கம் தொலைத்த டி.கல்லுப்பட்டி
/
கொசுக்கடியால் துாக்கம் தொலைத்த டி.கல்லுப்பட்டி
ADDED : மார் 04, 2024 05:40 AM
டி.கல்லுப்பட்டி; டி.கல்லுப்பட்டியில் கொசு உற்பத்தி அதிகரித்து விட்டதால் மக்கள் துாக்கமின்றி தவிக்கின்றனர்.
சாக்கடை கால்வாய் துார்வாருவதில் பேரூராட்சி மெத்தனமாக செயல்படுவதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சாக்கடைக்குள் குப்பை கொட்டப்படுவதால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி' அதிகரித்துள்ளது.
இதனால் பேரூராட்சி பகுதி மக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''பேரூராட்சியில் கொசுமருந்து கடந்த 3 மாதங்களாக தெளிக்கவில்லை. சாக்கடை கால்வாய்கள் பல மாதமாக துார்வாரப்படாமல் உள்ளது.
கழிவுகளை முழுமையாக அகற்றாமல் மேலாக கிடக்கும் பாலிதீன் பைகளை மட்டும் துாய்மை பணியாளர்கள் அள்ளுவதால் மண் மேவி விட்டது. நோய் பரவும் முன் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

