sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நிலையூர் கால்வாயில் சேதமடைந்த 'ஷட்டர்'கள்: விவசாயிகள் கவலை

/

நிலையூர் கால்வாயில் சேதமடைந்த 'ஷட்டர்'கள்: விவசாயிகள் கவலை

நிலையூர் கால்வாயில் சேதமடைந்த 'ஷட்டர்'கள்: விவசாயிகள் கவலை

நிலையூர் கால்வாயில் சேதமடைந்த 'ஷட்டர்'கள்: விவசாயிகள் கவலை


ADDED : அக் 21, 2024 05:19 AM

Google News

ADDED : அக் 21, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் நிலையூர் கால்வாயில் ஷட்டர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் நிலையூர் கால்வாய் வழியாக, திருப்பரங்குன்றத்தில் பாணாங்குளம், செவ்வந்திகுளம், ஆரியங்குளம், குறுக்கட்டான், பெருங்குடி கண்மாய்களுக்கு செல்லும்.

இதில் திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் பகுதியில் இக்கண்மாய்களுக்கு முறைவைத்து தண்ணீரை பிரித்து அனுப்ப 4 ஷட்டர்கள் உள்ளன.

விவசாயிகள் பூபதி, கழுவன், அய்யாவு, கார்த்திக், மணிகண்டன், குமரன், சுப்பிரமணி கூறியதாவது: பாணாங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்படும் ஷட்டர் சீராக உள்ளது. மற்ற மூன்று ஷட்டர்களும் பழுதாகி விட்டன.

பாணாங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கும் போது மற்ற கண்மாய்களுக்கு செல்லும் ஷட்டர்களை அடைக்க முடியாது. இதனால் பாணாங்குளம் கண்மாய் நிரம்புவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிப்படைகிறது. ஷட்டர்களை சீரமைக்க நடவடிக்கை தேவை என்றனர்.






      Dinamalar
      Follow us