sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பாலத்தில் பள்ளத்தால் அபாயம்

/

 பாலத்தில் பள்ளத்தால் அபாயம்

 பாலத்தில் பள்ளத்தால் அபாயம்

 பாலத்தில் பள்ளத்தால் அபாயம்


ADDED : டிச 26, 2025 06:13 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருமால்நத்தம் கால்வாய் பாலத்தில் உருவாகியுள்ள பள்ளத்தால் விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது.

இங்கு மயானம் அருகே தச்சம்பத்து ரோட்டில் மழைநீர் உபரிக் கால்வாயின் மீது கான் கிரீட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சேதமடைந்து காரைகள் பெயர்ந்து சிறிய ஓட்டை விழுந்து தற்போது பயங்கரமான பள்ளமாக மாறி கம்பிகள் தெரியும் நிலை உள்ளது. தற்காலிகமாக கம்பியின் உதவியுடன் உடை கற்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது.

விவசாயம், வேலை உள்ளிட்டவற்றிற்காக தினமும் ஏராளமானோர் இப்பாலத்தின் வழியே சென்று வருகின்றனர். பகலிலேயே பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பலர் விழுந்து காயமடைகின்றனர்.

இரவில் விளக்குகள் இல்லாததாலும் வளைவுப் பகுதி என்பதாலும் விபத்து ஏற்பட்டு விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது.

மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us