/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகளின் தோழி கர்ப்பம் தந்தை தலைமறைவு
/
மகளின் தோழி கர்ப்பம் தந்தை தலைமறைவு
ADDED : செப் 28, 2025 02:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லொச்சான்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 35. பால்பண்ணை நடத்தி வருகிறார்.
இவரது மகளும், அருகே வசிக்கும் 13 வயது சிறுமியும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். சில நாட்களாக சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதித்தனர்.
அப்போது சிறுமி 5 மாத கர்ப்பம், இதற்கு சதீஷ்குமார்தான் காரணம் எனத்தெரிந்தது. அவரை மகளிர் போலீசார் தேடிவருகின்றனர்.