sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சோழவந்தானில் நலிந்த தென்னங்கிடுகு தொழில்

/

சோழவந்தானில் நலிந்த தென்னங்கிடுகு தொழில்

சோழவந்தானில் நலிந்த தென்னங்கிடுகு தொழில்

சோழவந்தானில் நலிந்த தென்னங்கிடுகு தொழில்


ADDED : நவ 09, 2024 04:41 AM

Google News

ADDED : நவ 09, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : சோழவந்தான், குருவித்துறை, துவரிமான் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம் நடக்கிறது. இன்றைய நவீன காலத்தில் ஆஸ்பெட்டாஸ், தகர ஷீட், துணியால் ஆன ஷாமியானா பந்தல் பயன்பாடு அதிகரிப்பால் தென்னை, பனை கிடுகுகளின் பயன்பாடு குறைந்து விட்டது.

கைவினைப் பொருட்கள், கிடுகு, தட்டிகள் தயாரிப்பும், வருவாயும் குறைந்துள்ளதாக சோழவந்தான் பகுதி தொழிலாளர்கள் தெரிவித்தனர். அதேபோல விசிறி, தட்டிகள் உட்பட பல பொருட்கள் பிளாஸ்டிக் தயாரிப்பு வருகையால் மவுசு குறைந்துவிட்டது.

இரும்பாடி நாகு கூறுகையில், ''வெயில் காலங்களில் கிடுகு அதிகம் விற்பனையாகும். மழைக் காலத்தில் குறைவு தான். ஆனாலும் வேலை தொடர்ந்து இருக்கும். ஒரு நாளைக்கு 100 கிடுகு பின்னுவேன் ரூ.140 கூலியாகக் கிடைக்கும். விசிறி பின்ன தெரியாது. தற்போது யாரும் விரும்பிக் கேட்பதும் இல்லை. இத்தொழிலில் வருமானம் குறைந்து விட்டதால் யாரும் விரும்புவதில்லை'' என்றார்.






      Dinamalar
      Follow us