sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கட்சிகளின் 'ரோடுஷோ' தடைவிதிக்க வலியுறுத்தல்

/

கட்சிகளின் 'ரோடுஷோ' தடைவிதிக்க வலியுறுத்தல்

கட்சிகளின் 'ரோடுஷோ' தடைவிதிக்க வலியுறுத்தல்

கட்சிகளின் 'ரோடுஷோ' தடைவிதிக்க வலியுறுத்தல்


ADDED : அக் 15, 2025 01:03 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் மதுரை கிளையின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது.

செயலாளர் பெரியதம்பி முன்னிலை வகித்து சங்க செயல்பாடுகள் குறித்த அறிக்கை சமர்ப்பித்தார். பேராசிரியர் ஆனந்தன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மனோகரன், அகில இந்திய ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க புரவலர் பார்த்தசாரதி, பேராசிரியர்கள் அனந்தகிருஷ்ணன், கிருஷ்ணன், டி.ராஜேந்திரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு உணவளித்தனர்.

கரூர் சம்பவம் போன்ற நிகழ்வுகள் இனி நடக்காதிருக்க, அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவுக்கு தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் ஓய்வூதிய மதிப்புறு சட்டத்தை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும்.

எட்டாவது ஊதியக்குழுவை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us