/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோயிலில் இரவிலும் பக்தர்கள் அனுமதி
/
மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோயிலில் இரவிலும் பக்தர்கள் அனுமதி
மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோயிலில் இரவிலும் பக்தர்கள் அனுமதி
மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோயிலில் இரவிலும் பக்தர்கள் அனுமதி
ADDED : பிப் 12, 2025 11:30 PM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்.26 இரவு 10:00 மணி முதல் கோயில் நடை திறக்கப்பட்டு 27ம் தேதி அதிகாலை 5:00 மணி வரை விடியவிடிய அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.
அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை- பிப்.26ம் தேதி இரவு 10:00 மணி முதல் 10:40 மணி வரை, இரண்டாம் கால பூஜை இரவு 11:00 மணி முதல் 11:40 மணி வரை, மூன்றாம் கால பூஜை அதிகாலை 12:00 மணி முதல் 12:40 மணி வரை, நான்காம் கால பூஜை அதிகாலை 1:00 மணி முதல் 1:40 மணி வரை நடக்கும்.
சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை பிப்.26 இரவு 11:00 மணி முதல் 11:45 மணி முதல், இரண்டாம் கால பூஜை அதிகாலை 12:00 மணி முதல் 12:45 மணி வரை, மூன்றாம் கால பூஜை அதிகாலை 1:00 மணி முதல் 1:45 மணி வரை, நான்காம் கால பூஜை அதிகாலை 2:00 மணி முதல் 2:45 மணி வரை நடக்கிறது. அதிகாலை 3:45 மணிக்கு அர்த்தஜாம பூஜை, 4:00 மணிக்கு பள்ளியறை பூஜை, 5:00 மணிக்கு திருவனந்தல் பூஜை நடக்கிறது.
மகாசிவராத்திரியன்று மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் உற்ஸவர் சன்னதிகளில் விடிய, விடிய அபிஷேக, ஆராதனை நடக்கிறது. பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள் தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களை பிப்.26 மாலைக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம்.