/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சீமான் வழக்கில் தடையை நீக்க டி.ஐ.ஜி.,மனு
/
சீமான் வழக்கில் தடையை நீக்க டி.ஐ.ஜி.,மனு
ADDED : ஆக 13, 2025 06:33 AM
மதுரை: திருச்சி டி.ஐ.ஜி.,வருண்குமார். அவர் மற்றும் குடும்பத்தினர் பற்றி அவதுாறாக கருத்து வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி (ஜெ.எம்.,4) நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் அந்நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை நீதிமன்றம் நிராகரித்ததால் அதற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீமான் மனு தாக்கல் செய்தார். தனி நீதிபதி,'திருச்சி நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
நீதிபதி எல்.விக்டோரியாகவுரி நேற்று விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராமமூர்த்தி ஆஜரானார். தடையை நீக்க வருண்குமார் தரப்பில் அவரது வழக்கறிஞர் ஜெகதீஷ்பாண்டியன் மனு செய்தார். நீதிபதி இடைக்காலத் தடையை நீட்டித்து விசாரணையை ஆக.20க்கு ஒத்திவைத்தார்.