sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரேஷன் கார்டில் மதுபாட்டில் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

/

ரேஷன் கார்டில் மதுபாட்டில் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

ரேஷன் கார்டில் மதுபாட்டில் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

ரேஷன் கார்டில் மதுபாட்டில் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி


ADDED : ஆக 27, 2025 07:42 AM

Google News

ADDED : ஆக 27, 2025 07:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் புகைப்படத்திற்கான இடத்தில் மதுபாட்டில் இருந்தது, நேற்று தினமலர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து அந்தப்படம் நீக்கப்பட்டு, குடும்பத் தலைவர் படம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

பேரையூர் தாலுகா சின்னபூலாம்பட்டி தங்கவேல் 46. இவரது மனைவி ஜெயப்பிரியா. இவர்கள் ரேஷன் கார்டில் மனைவி ஜெயப்பிரியா குடும்பத் தலைவராகவும், கணவர் தங்கவேல், மகன், மகள் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இந்நிலையில் மகளுக்கு திருமணம் நடந்ததால், இ சேவை மையம் மூலம் அவரது பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கம் செய்தனர்.

கடந்த வாரம் நல வாரியத்தில் பதிவு செய்வதற்காக ஜெயப்பிரியா சென்றார். நலவாரியம் புதிய ரேஷன் கார்டை டவுன்லோட் செய்து பார்த்தனர். அப்போது கார்டில் குடும்பத் தலைவி போட்டோவுக்கு பதில் மது பாட்டில் படம் இருந்தது. இதனால் நலவாரியத்தில் பதிவு செய்ய முடியாது என திருப்பி அனுப்பினர்.

இச்செய்தி தினமலர் நாளிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து வருவாய்த் துறையினர் சின்னப்பூலாம்பட்டி சென்றனர். அங்கு ஜெயப்பிரியாவின் போட்டோவை பெற்று மது பாட்டிலை அகற்றிவிட்டு, குடும்பத்தலைவி ஜெயப்பிரியாவின் படத்தை அப்டேட் செய்து இ ரேஷன் கார்டு வழங்கினர்.

வருவாய்த் துறையினர் கூறுகையில், ''2017ல் புதிய ரேஷன் கார்டு வாங்கியுள்ளனர். 2018 ல் மொபைல் ஆப் மூலம் போட்டோ மாற்றம் நடந்திருக்கலாம். அப்போது முதல் பீர் பாட்டில்தான் குடும்பத் தலைவி படமாக இடம்பெற்றுள்ளது.

இதை அவர்கள் கவனிக்கவில்லை. தற்போது தான் கவனித்துள்ளனர் என்றனர்.






      Dinamalar
      Follow us