ADDED : ஆக 27, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்; சோழவந்தான் ரயில்வே பாலத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் தடதடத்துச் செல்லும் நிலை குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பள்ளங்களை சரி செய்தனர்.