ADDED : மார் 05, 2026 04:50 AM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி சந்தை திடலுக்குள் நுாலகம் அருகே மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வந்தது.
பல நாட்களாக கொட்டியிருந்த காய்கறி, பூக்களின் கழிவுகளையும் அகற்றாமல் இருந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் அந்தப்பகுதியில் தேங்கியிருந்த கழிவுநீரை அகற்றியது. நீண்ட நாட்களாக தேங்கி துர்நாற்றத்துடன் குவிந்த குப்பை அகற்றும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
