/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வி.எச்.பி., சார்பில் புத்தாடை வழங்கல்
/
வி.எச்.பி., சார்பில் புத்தாடை வழங்கல்
ADDED : அக் 16, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தீபாவளியை முன்னிட்டு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளரும், மதுரை மாவட்ட தலைவருமான சந்திரசேகரன் தலைமையில் கிராம கோயில் பூசாரிகள், அருள்வாக்கு கூறும் கோடாங்கிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன.
திருமங்கலத்தில் உசிலம்பட்டி ரோட்டில் உள்ள சீலைக்காரி அம்மன் கோயிலில் நடந்த இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கணேசன், அமைப்பாளர் வேலுமணி, பொருளாளர் ரமேஷ்பாபு, மண்டல் தலைவர் முருகன், மலைச்சாமி, தவமணி, சுசீலா, பாண்டீஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.