ADDED : நவ 16, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளியில் பன் பிட் விளையாட்டு அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து, கைப்பந்து, எறி பந்து, கபடி, கால்பந்து, தடகள போட்டிகள் நடந்தன.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி இயக்குநர் ஜெயகிஷோர்குமார் துவக்கி வைத்தார். முதல்வர் ஜோதிலட்சுமி, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சிவா, அசோக், பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

