ADDED : அக் 18, 2025 04:06 AM
மதுரை: மதுரையில் திருஞானம் துவக்கப் பள்ளியில் தீபாவளி புத்தாடை வழங்கும் விழா மாணவர் மன்றத் தலைவர் பூஜா தலைமையில் நடந்தது. செயலாளர் முகமது உமர் வரவேற்றார். இணைச் செயலாளர் ஹர்சித் ராஜ் தலைமையில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. தலைமையாசிரியர் சரவணன் பேசினார். ஏற்பாடுகளை ஆசிரியைகள் பாக்கியலட்சுமி, கீதா, மன்ற துணைத் தலைவர் தமினா செய்திருந்தனர்.
* மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் வீரவாஞ்சிநாதன் கிளை சார்பில், புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி, கிளைத் தலைவர் அன்னபூரணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலர் பாஸ்கரன், நிர்வாகிகள் ராணி திரிபுரசுந்தரி, உமாகுமார், காயத்ரி, வசந்த கோகிலம், விஸ்வநாதன், மாவட்ட பொதுச் செயலர் ஸ்ரீகுமார், பொருளாளர் நடராஜன் பங்கேற்றனர். 80 பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது.