sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

/

தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு


ADDED : டிச 01, 2024 05:30 AM

Google News

ADDED : டிச 01, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி, : உசிலம்பட்டி நகராட்சி கூட்டம் தலைவர் சகுந்தலா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.

கமிஷனர் (பொறுப்பு) அசோக்குமார், அ.தி.மு.க., அ.ம.மு.க., கவுன்சிலர்கள் 10 பேர் பங்கேற்றனர். துணைத்தலைவர் தேன்மொழி, தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்ட அரங்கிற்கு வராமல் வளாகத்தில் கூடினர்.

காலியாக உள்ள கமிஷனர், பொறியாளர், கட்டட ஆய்வாளர் பணியிடங்களுக்கு உடனே அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கமிஷனர் தெரிவித்தார்.

இந்நிலையில், தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்ட அரங்கிற்கு வந்தனர். 'நகராட்சித் தலைவர் சகுந்தலா உசிலம்பட்டி வளர்ச்சி திட்டங்களையும், நிதியையும் அரசிடமிருந்து பெற்று தராததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்' என அறிவித்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us