sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

/

 நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

 நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

 நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு


ADDED : டிச 25, 2025 06:20 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: உசிலம்பட்டி நகராட்சி கவுன்சில் கூட்டம் துணை தலைவர் தேன்மொழி தலைமையில் நடந்தது.20 தீர்மானங்கள் ஒப்புதலுக்கு கொண்டு வந்தனர்.

அதில் உசிலம்பட்டி சந்தை திடல் கடைகளுக்கு பழைய வாடகை வசூலிக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்காக அப்புறப்படுத்தப்படும் கடைகளுக்கு மாற்று இடம் வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. தி.மு.க., கவுன்சிலர்கள் (வார்டு 5) சந்திரன், (வார்டு 12)ஷோபனாதேவி எதிர்ப்பு தெரிவித்தனர்.

'ஏற்கனவே கடை வைத்துள்ளவர்கள் ரூ.6 கோடிக்கும் மேல் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இவர்களிடம் அதிகாரிகள், தி.மு.க., வினர் முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு கடைகளை அவர்களுக்கே கொடுக்க முயற்சிக்கிறீர்கள். இ--டெண்டர் மூலம் கடைகளை ஏலம் விட வேண்டும்' என்றனர். 'இ-டெண்டரால் நிதிஇழப்பு ஏற்படும்' என கமிஷனர் இளவரசன் கூறினார். துணைத்தலைவர், தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அமைதி காத்ததால் சந்திரன், ஷோபனாதேவி வெளிநடப்பு செய்தனர்.






      Dinamalar
      Follow us