sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கடையை துவம்சம் செய்த தி.மு.க., கவுன்சிலர்கள்

/

கடையை துவம்சம் செய்த தி.மு.க., கவுன்சிலர்கள்

கடையை துவம்சம் செய்த தி.மு.க., கவுன்சிலர்கள்

கடையை துவம்சம் செய்த தி.மு.க., கவுன்சிலர்கள்

9


ADDED : நவ 11, 2024 11:56 PM

Google News

ADDED : நவ 11, 2024 11:56 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: மதுரை அருகே திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில், நகராட்சி கடையை நடத்தி வருபவர் அம்மாசி. இக்கடையை ஆறுமுகம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில், சாத்தங்குடி பாண்டியிடம், அம்மாசி, 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், பணம் கொடுத்தவருக்கு ஆதரவாக திருமங்கலம் நகராட்சி ஒன்றாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் காசிப்பாண்டி, மூன்றாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் 'பெல்ட்' முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கடந்த 6ல் கடைக்கு சென்றனர். ஆறுமுகத்திடம் வாக்குவாதம் செய்தனர்.

வாக்குவாதம் முற்றி, பலகார கடை தட்டுகளை கவுன்சிலர் காசிப்பாண்டி துாக்கி வீசி சூறையாடினார். அவருக்கு ஆதரவாக, கட்சியினர் இருந்தனர். இரு தரப்பினரும் திருமங்கலம் நகர் போலீசில் புகார் அளித்துள்ளனர்; போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us