sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 அரசியல் கேள்விகள் கேட்காதீங்க... மதுரையில் வைகோ 'டென்ஷன்'

/

 அரசியல் கேள்விகள் கேட்காதீங்க... மதுரையில் வைகோ 'டென்ஷன்'

 அரசியல் கேள்விகள் கேட்காதீங்க... மதுரையில் வைகோ 'டென்ஷன்'

 அரசியல் கேள்விகள் கேட்காதீங்க... மதுரையில் வைகோ 'டென்ஷன்'


ADDED : நவ 18, 2025 05:58 AM

Google News

ADDED : நவ 18, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் நிருபர்கள் சந்திப்பின்போது, மல்லைசத்யா குறித்து கேள்விகள் எழுப்ப முயற்சித்ததால் 'டென்ஷன்' ஆன ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள். நான் சொல்வதை மட்டும் செய்தியாக வெளியிடுங்கள். விதண்டவாதமான கேள்விகளுக்கு பதில் இல்லை என சீறினார்.

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ துவங்கவுள்ள போதை கலாசாரத்திற்கு எதிரான சமத்துவ நடைபயணத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நேர்காணல் மதுரையில் நடந்தது.

அப்போது அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் நடைப்பயணமாக இதுவரை 7000 கி.மீ., நடந்துள்ளேன். தற்போது மதுவை விட கஞ்சா, போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர்.

போதைப்பொருளை பயன்படுத்துவதால் இளம்பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடக்கிறது. சில இடங்களில் பெண்கள் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது.

அரிவாள், பட்டாகத்தியுடன் மாணவர்கள் கல்லுாரிக்கு செல்கின்றனர்.

இவற்றிலிருந்து இளைஞர்கள், மாணவர்களை மீட்கவே இந்த விழிப்புணர்வு சமத்துவ நடைபயணம் செல்லவுள்ளேன். ஜன.,2ல் திருச்சியில் துவங்கி 12ல் மதுரையில் நிறைவடையும். முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

இப்பயணத்தில் மது, புகை பழக்கம் உள்ளவர்களை சேர்க்க மாட்டேன் என்றார்.






      Dinamalar
      Follow us