ADDED : அக் 19, 2024 05:35 AM

அலங்காநல்லுார் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பணியாற்றிய பஸ்சின் படிக்கட்டிலேயே டிரைவர் பாபு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாடிப்பட்டியை அடுத்த கட்டக்குளம் சங்கர் மகன் பாபு 32; ஜவுளிப் பூங்காவில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் கம்பெனி பஸ் டிரைவர். அலங்காநல்லுார் அருகே 15பி.மேட்டுப்பட்டியில் இரவில் நிறுத்தி வைத்திருந்த பஸ்சை எடுத்துச் செல்ல நேற்று காலை சென்றார்.
ஆனால் குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் இவர் ஊழியர்களை ஏற்றி வராததாலும், அலைபேசியை எடுக்காததாலும், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பஸ் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து பார்த்தனர். பஸ்சின் பின் படிக்கட்டில் பாபு துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.
தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இவருக்கு மனைவி மற்றும் 8, 5 வயதில் மகள், மகன் உள்ளனர்.