/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாய் மீது அரசு பஸ் மோதல் டிரைவர் 'சஸ்பெண்ட்'
/
நாய் மீது அரசு பஸ் மோதல் டிரைவர் 'சஸ்பெண்ட்'
ADDED : டிச 16, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை செக்காணுாரணி போக்குவரத்துக் கிளை டிரைவர் நமசிவாயம். டிச. 9ல் சோழவந்தான் பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசுபஸ்சை இயக்கிய போது அங்கிருந்த நாய் மீது மோதினார். கால்களில் படுகாயமடைந்து துடிதுடித்த நாயை பார்த்த வழக்கறிஞர் ஒருவர் இதுகுறித்து புகார் அளித்தார்.
நாய்க்கு சிகிச்சை அளிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டதன் காரணமாக மதுரை மண்டல போக்குவரத்து கழகம் டிரைவரை சஸ்பெண்ட் செய்தது.

