ADDED : பிப் 03, 2026 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: துபாய்--மதுரை விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் துபாயிலிருந்து மதுரைக்கு தினம் விமானம் இயக்குகிறது. நேற்று காலை 7:40 மணிக்கு மதுரை வரவேண்டிய துபாய் விமானம் 14 மணிநேரம் தாமதமாக இரவு 9:40 மணிக்கு வரும் என பயணிகளுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் சார்பில் தகவல் அனுப்பி உள்ளனர்.
அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை இரவு நேரத்திற்கு மாற்றியமைத்த நிலையில், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் பணிகளுக்கு மீண்டும் தகவல் அனுப்பி உள்ளனர். இதனால் அதில் செல்ல இருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

