/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துரைச்சாமிபுதுார் கிராம மக்கள் மறியல்
/
துரைச்சாமிபுதுார் கிராம மக்கள் மறியல்
ADDED : ஜூன் 26, 2025 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் இருந்து தினமும் காலை 8:30 மணிக்கு துரைச்சாமிபுதுார் வழியாக அரசு பஸ் பாப்பாபட்டிக்கு செல்லும். துரைச்சாமிபுதுாருக்கு தினமும் 4 முறை உசிலம்பட்டியில் இருந்து அரசு பஸ் வரும்.
ரோட்டோர கிணற்றால் பாதுகாப்பு இல்லை எனக்கூறி சில மாதங்களாக கிராமத்திற்குள் பஸ் வர மறுக்கிறது. துரைச்சாமிபுதுார் வந்து சென்ற பஸ்சையும் நிறுத்திவிட்டனர். இதனால் 2 கி.மீ., துாரம் நடந்தே மக்கள், மாணவர்கள் செல்லவேண்டியுள்ளது. காலை 9:30 மணியளவில் மாணவர்கள், கிராம மக்கள் உசிலம்பட்டி அரசு பஸ் டெப்போ முன் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் சமரசம் செய்தனர்.