ADDED : அக் 16, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை சுப்ரமணியபுரம் பவர்ஹவுஸில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமை யில் நாளை (அக்.17) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
இக்கோட்டத்தில் உள்ள சுப்ரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால் ரோடு, கோயில், மகாளிப்பட்டி, மகால், ஜான்சி ராணி பூங்கா, அரசமரம், தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி பகுதி மின்நுகர்வோர் குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.