நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மதுரை நகர் கிளையின் புதிய நிர்வாகிகள் சங்க தேர்தல் நடந்தது. தேர்தல் ஆணையராக மாவட்ட மைய தலைவர் ராமானுஜம், துணை ஆணையராக முத்துச்சாமி பணியாற்றினர்.
சங்க புதிய தலைவராக நடராஜன், செயலாளராக சிவநாத், பொருளாளராக பாலாபிஷேகம், துணைத் தலைவர்களாக மகாலிங்கம், ராஜாமணி, இணைச் செயலாளர்களாக சீனிவாசன், பரமசிவம் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.