நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மதுரை மாவட்ட தலைவராக தென்கரை முத்துப்பிள்ளை மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
மதுரையில் இச்சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல்திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி செல்வம் முன்னிலையில் நடந்தது. தற்போது தலைவராக உள்ள தென்கரை முத்துப்பிள்ளை மீண்டும் போட்டியிட்டு இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக திவ்யநாதன், அமைப்பு செயலாளராக ஆத்மநாதன், மாவட்ட மகளிரணிஅமைப்பாளர்களாக லிங்கேஸ்வரி, ஜெயலட்சுமி, துணைத் தலைவர்களாக முத்துக்குமரன், அருள்ராஜ், இணை செயலாளர்களாக ஜெயக்குமார்,ஹரிஹரன் தேர்வு செய்யப்பட்டனர்.