ADDED : பிப் 21, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.
டி.ஆர்.ஓ., சக்திவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கண்ணன், ஆர்.டி.ஓ.,க்கள் ஷாலினி, ஜெயந்தி, சாந்தி, தாசில்தார் ேஹமா, வருவாய், போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
ஓட்டுச்சாவடிகளின் தற்போதைய நிலை, அங்குள்ள வசதிகள், குறைகள், தேவைகள் குறித்தும், பாதுகாப்பு அளிப்பது குறித்தும் கலெக்டர் ஆலோசித்தார். தேர்தலன்று மின்னணு ஓட்டு இயந்திரங்களை பூத்களுக்கு எடுத்துச் செல்வது, ஓட்டுப்பதிவு முடிந்தபின் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையங்களுக்கு கொண்டு செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

