ADDED : அக் 02, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் வடக்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள மண்டல அலுவலக வளாகத்தில் நாளை (அக்.3) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
இப்பகுதியில் உள்ள தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லுார், தாகூர்நகர், சொக்கிக்குளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திக்குளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதுார், மேலமடை பகுதியினர் தங்கள் குறைகளை நேரிலே, மனுக்கள் மூலமோ தெரிவிக்கலாம் என, செயற்பொறியாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.