/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இழப்பீடு கோரிய மனுவை மின்வாரியம் பரிசீலிக்க உத்தரவு * உயர்நீதிமன்றம் கருத்து
/
இழப்பீடு கோரிய மனுவை மின்வாரியம் பரிசீலிக்க உத்தரவு * உயர்நீதிமன்றம் கருத்து
இழப்பீடு கோரிய மனுவை மின்வாரியம் பரிசீலிக்க உத்தரவு * உயர்நீதிமன்றம் கருத்து
இழப்பீடு கோரிய மனுவை மின்வாரியம் பரிசீலிக்க உத்தரவு * உயர்நீதிமன்றம் கருத்து
ADDED : ஏப் 09, 2025 04:51 AM
மதுரை,: மதுரை மாவட்டம் மேலுார் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி மரணம் அடைந்ததற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கில், மனுவை மின்வாரியம் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மேலுார் அருகே பரமநாதபுரம் அஞ்சலை தாக்கல் செய்த மனு: எனது கணவர் கணேசன். எங்களுக்கு 4 குழந்தைகள். கணவர் 2024 அக்.13 ல் எங்கள் தோட்டத்திற்கு சென்றார். கீழே அறுந்து கிடந்த மின்ஒயரிலிருந்து கசிந்த மின்சாரம் தாக்கி இறந்தார். எங்கள் தோட்டத்தில் மோட்டார் பம்புசெட் இல்லை. அருகிலுள்ள தோட்டத்திற்கு எங்கள் தோட்டம் வழியாக சென்ற மின் ஒயரை முறையாக பராமரிக்காததால் அறுந்து விழுந்து சம்பவம் நடந்துள்ளது.
கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். மின்சாரம் தாக்கி கணவர் இறந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணவரின் மரணத்திற்கு பொறுப்பேற்று ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழக மின்வாரிய தலைவர், மதுரை மின்வாரிய கண்காணிப்பு பொறியாளருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்கவில்லை. இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி விவேக்குமார் சிங்: இதுபோல் மனு அளிக்கும்போது அதை காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதற்கு பதிலாக, பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உள்ளது. இதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. பரிசீலிக்காதது கடமையை மீறுவதாகும். கண்காணிப்பு பொறியாளர் 2 மாதங்களில் மனுவை பரிசீலித்து சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.