ADDED : செப் 24, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அரசரடி மின்பகிர்மான வட்டம் பகுதிக்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (செப். 25) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க உள்ளது.
அரசரடி மேற்கு கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமை வகிப்பார். இக்கோட்டத்தில் உள்ள மின்நுகர்வோர் தங்கள் குறைகளை மேற்பார்வை பொறியாளருடன் நேரில் கலந்துரையாடி தீர்வு காணலாம் என, செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.