நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பரங்குன்றம் வட்டாரக் கிளை நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பூர்ணவள்ளி வரவேற்றார்.
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வினோத்குமார், கண்மணி, விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். இதில் புதிய வட்டாரத் தலைவராக ஜோஸ்பின் நிர்மலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசியதாவது:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை களைய வேண்டும்.ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜன.25ல் மாவட்டங்களில் நடக்கும் தர்ணா, பிப்ரவரியில் சென்னையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும் என்றார்.

