sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குடும்பத்தினருடன் கைதிகள் வீடியோ காலில் பேசும் வசதி

/

குடும்பத்தினருடன் கைதிகள் வீடியோ காலில் பேசும் வசதி

குடும்பத்தினருடன் கைதிகள் வீடியோ காலில் பேசும் வசதி

குடும்பத்தினருடன் கைதிகள் வீடியோ காலில் பேசும் வசதி


ADDED : அக் 19, 2024 05:30 AM

Google News

ADDED : அக் 19, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் உறவினர்களின் அலைச்சல், காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் கைதிகளை உறவினர்கள குறிப்பிட்ட நாட்களில் சந்தித்து பேசி வருகின்றனர்.

இதற்காக காலை முதல் சிறைக்கு வந்து காத்திருக்கும் சூழல் இருந்த நிலையில் மதுரை உள்ளிட்ட சில சிறைகளில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் சந்திக்க 'அட்வான்ஸ் புக்கிங்' செய்யும் வசதி அமலில் உள்ளது. அதேசமயம் வரமுடியாத சூழலில் குடும்பத்தினருடன் கைதிகள் 6 நாட்களுக்கு ஒருமுறை 9 நிமிடங்கள் பேச அனுமதிக்கப்படுகின்றனர்.

அடுத்த முயற்சியாக குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கைதிகள் குடும்பத்தினர் பேச உள்ளனர்.

3 நாட்களுக்கு ஒருமுறை 12 நிமிடங்கள் கைதி பேசலாம். பாதுகாப்பு கருதி சிறை நிர்வாகத்தால் பதிவு செய்யப்படும். சிறை காவலர்களும் கண்காணிப்பர். மாவட்ட சிறைகளிலும் இவ்வசதி அமைகிறது.






      Dinamalar
      Follow us