sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மதுரையில் பக்தர்களை ஏமாற்றிய போலி கைடுகள்: 3 பேர் சிக்கினர்

/

 மதுரையில் பக்தர்களை ஏமாற்றிய போலி கைடுகள்: 3 பேர் சிக்கினர்

 மதுரையில் பக்தர்களை ஏமாற்றிய போலி கைடுகள்: 3 பேர் சிக்கினர்

 மதுரையில் பக்தர்களை ஏமாற்றிய போலி கைடுகள்: 3 பேர் சிக்கினர்


ADDED : நவ 23, 2025 02:29 AM

Google News

ADDED : நவ 23, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், ஆந்திர பக்தர்களிடம், வசூலில் ஈடுபட்ட போலி கைடுகள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இரு நாட்களுக்கு முன் ஆந்திர பக்தர்கள், 39 பேர் வந்தனர். அவர்களிடம், 'கைடுகள்' என அறிமுகமான மூவர், சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி, தலா, 250 ரூபாய் வசூலித்தனர்.

கோவில் கவுன்டரில், 50 ரூபாய்க்கு தரிசன டிக்கெட் எடுத்து, அவர்களை அம்மன் சன்னிதிக்கு அழைத்து சென்றனர். சுவாமி சன்னிதியிலும் இதேபோல் டிக்கெட் எடுக்க, 'சிறப்பு தரிசனம் எனக்கூறி, 50 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்கிறீர்களே' என, ஆந்திர பக்தர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்ய, கோவில் ஊழியர்கள் விசாரித்தனர்.

அதில், ஓட்டல் ஒன்றில் வேலை செய்யும் சிம்மக்கல் வெங்கடேஷ், 46, என்பவர் தலைமையில், அம்மையப்பன், 42, கணேசன், 47, ஆகியோர் போலி கைடுகளாக நடித்து, ஆந்திர பக்தர்களிடம், 9,750 ரூபாய் வசூலித்தது தெரிந்தது.

கோவில் உதவி கண்காணிப்பாளர் சோமசுந்தரம் புகாரில், மூவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us