ADDED : பிப் 06, 2026 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கொட்டாம்பட்டி தாமரைப்பட்டியில் வேளாண் வணிகம், வேளாண் விற்பனை துறையின் பண்ணை வாயில் வர்த்தகம் நடந்தது.
விவசாயி ரெங்கசாமியின் வயலுக்கே சென்று 22.36 டன் நெல்லைப் பெற்று மூலம் மேலுார் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வாயிலாக விற்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.7.50 லட்சம் என்கிறார் துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி.
அவர் கூறுகையில்,'' மதுரையில் 2 ஆண்டுகளாக விவசாயிகளின் நெல், மக்காச்சோளம், சிறுதானியங்களை அவர்களின் வயல்களில் இருந்தே விற்று கொடுக்கும் வர்த்தகத்தை கையாள்கிறோம்'' என் றார். மதுரை விற்பனைக்குழு செயலாளர் அழகுராஜா, வேளாண்மை அலுவலர் சித்தார்த், ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் சந்தியா கலந்து கொண்டனர்.

