ADDED : பிப் 06, 2026 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை செல்லுார் பந்தல்குடி கால்வாய் கொசுக்களால் நிரம்பியுள்ளதால் கொசுக்கடியில் சிரமப்பட்டு வரும் தங்களை பாதுகாக்க வேண்டும் என பந்தல்குடி மக்கள் அ.தி.மு.க., மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணனிடம் முறையிட்டனர்.
நேரில் பார்வையிட்டவர், கழிவுநீரில் உள்ள கொசு முட்டைகளை அழிக்க ஸ்பிரேயர் மூலமாக மருந்து தெளித்ததுடன், தெருக்கள் முழுவதும் கொசு மருந்து தெளிப்பு, கொசு விரட்டி புகை அடிக்கும் பணிகளை மேற்கொண்டார்.

