நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், கொப்பரை தேங்காய்களை அரசு கொள்முதல் செய்யவும், பொது விநியோகத் திட்டத்தில் தேங்காய் எண்ணெயை இணைத்து மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடுத்த கட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் உசிலம்பட்டியில் சங்க நிறுவனர் ஈசன்முருகசாமி தலைமையில் நடந்தது.
மாநிலச் செயலாளர் முத்துவிஸ்வநாதன், துணைச்செயலாளர் நேதாஜி, நிர்வாகிகள் காராமணி, தமிழ்செல்வன், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் சின்னயோசனை, பாரம்பரிய நெல் விவசாயி அலெக்ஸ் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் தென்னை விவசாயிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தென்னை விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்து மாநிலம் தழுவிய ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்தனர். சின்னச்சாமி நன்றி கூறினார்.

