sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வணிகத்துாதர்களாக விவசாயிகள்

/

வணிகத்துாதர்களாக விவசாயிகள்

வணிகத்துாதர்களாக விவசாயிகள்

வணிகத்துாதர்களாக விவசாயிகள்


ADDED : டிச 02, 2024 05:01 AM

Google News

ADDED : டிச 02, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் சார்பில் விவசாயிகளை வணிகத் துாதர்களாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படுவதாக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கமிஷனர் பிரகாஷ் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதிலும் கிராமத்திற்கு இரண்டு விவசாயிகள் வணிகத்துாதர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

இவர்கள் விவசாயிகளுக்கும் வேளாண் வணிகத்துறைக்கும் பாலமாக செயல்படுவர். ஏற்கனவே அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுரையில் 20 இடங்களில் உலர் களத்துடன், விளைபொருட்களை தரம்பிரித்து சுத்தப்படுத்துவதற்கான ஹால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி விவசாயிகள் அறுவடை செய்த பின் தங்களது பொருட்களை இந்த ஹாலில் மொத்தமாக வைக்கும் போது வியாபாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்த எளிதாக இருக்கும். இதன் மூலம் விளைபொருட்களை நிரப்புவதற்கான சாக்கு, போக்குவரத்து வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி அனைத்தும் விவசாயிகளுக்கு மிச்சமாகும். இந்த விவசாயிகளை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதே வணிகத் துாதராக செயல்படும் விவசாயிகளின் வேலை. இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தற்போது வாடிப்பட்டி, உசிலம்பட்டியில் 64 விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி அளித்து வணிகத் துாதர்களாக்கியுள்ளோம். டிச. 2ல் மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றத்திற்கும் டிச. 3 ல் கள்ளிக்குடி, திருமங்கலம், 4ல் மேலுார், கொட்டாம்பட்டி, 5 ல் டி.கல்லுப்பட்டி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

உசிலம்பட்டி, வாடிப்பட்டியில் நடந்த பயிற்சி முகாமில் வேளாண் விற்பனைக்குழு செயலாளர் அம்சவேணி, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சரவணப்பெருமாள் தலைமை வகித்தனர். உதவி வேளாண் அலுவலர்கள் ஆனந்தன், கந்தசாமி, ராஜ்குமார், சர்மிளா, காயத்ரி கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர்கள் மீனா, சித்தார்த், மேற்பார்வையாளர்கள் சுந்தரி, அபிநயா திட்டங்கள் குறித்து விளக்கினர்.

விவசாயிகளை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதே வணிகத் துாதராக செயல்படும் விவசாயிகளின் வேலை. இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us