sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வைகை தண்ணீர் எப்போது வரும் விவசாயிகள் கேள்வி

/

வைகை தண்ணீர் எப்போது வரும் விவசாயிகள் கேள்வி

வைகை தண்ணீர் எப்போது வரும் விவசாயிகள் கேள்வி

வைகை தண்ணீர் எப்போது வரும் விவசாயிகள் கேள்வி


ADDED : அக் 15, 2025 01:09 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் கவிதா தலைமையில் நடந்தது.

விவசாயிகள் மாரிச்சாமி, பாண்டியன், சிவராமன், பெரிய தேவர், மகாமுனி பேசியதாவது: மாடக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் நீர் வரத்து கால்வாயில் ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் வீடுகளின் செப்டிக் டேங்க் கழிவுகள் விடப்படுகின்றன. கால்வாய் தடுப்புச் சுவரை துளையிட்டும், சுவர் மேல் குழாய் பதித்தும் கழிவுகளை வரத்து கால்வாயில் விடுகின்றனர்.

தென்கால் கண்மாய் கரையில் தார் சாலை அமைக்க கரையில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணின் ஒரு பகுதி கண்மாய்க்குள் கொட்டப்பட்டது. வைகை அணை தண்ணீர் கண்மாய்க்கு வருவதற்குள் அகற்ற வேண்டும். மானாவாரி கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் கொண்டு வருவதற்காக முதல் கட்டமாக அளவீடு செய்யும் பணி, மண் மாதிரியும் ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அதன் பின்பு எந்த பணியும் நடக்கவில்லை. கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. மற்றவை அடைப்பட்டு விட்டன. அந்த கால்வாய்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை என்றனர்.






      Dinamalar
      Follow us