ADDED : அக் 02, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : திருவேடகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சந்தனம், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஜோதி ராமலிங்கம் பேசினர்.
வடகரை கண்மாய் அருகே தார் ரோடு அமைத்தல், சோழவந்தானில் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். துணைச் செயலாளர் பிச்சை நன்றி கூறினார்.