sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காப்பீட்டுத் தொகை பெற அலையும் விவசாயிகள்

/

காப்பீட்டுத் தொகை பெற அலையும் விவசாயிகள்

காப்பீட்டுத் தொகை பெற அலையும் விவசாயிகள்

காப்பீட்டுத் தொகை பெற அலையும் விவசாயிகள்


ADDED : ஜூலை 02, 2025 06:31 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூர் பகுதியில் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்குமோ, கிடைக்காதோ என வேளாண்துறை அலுவலகத்திற்கு விவசாயிகள் நடையாய் நடந்து, அலைந்து திரிகின்றனர்.

இப்பகுதியில் கடந்தாண்டு ஆடிப்பட்டத்தில் பெய்த மழையை பயன்படுத்தி மக்காச்சோளம், பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து மழை இல்லாததால் பயிர்கள் கருகின.

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர்.

இந்த பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை, சேடப்பட்டி ஒன்றியத்தில் காப்பீடு செய்தவர்களின் வங்கிக் கணக்கில் ஒரு வாரத்திற்கு முன்பு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அருகேயுள்ள டி. கல்லுப்பட்டி ஒன்றிய விவசாயிகளுக்கு தொகை எதுவும் வரவு வைக்கப்படாததால் விவசாயிகள் தனித்தனியாக வேளாண்துறை அலுவலகத்திற்கு சென்று பாதித்த பருத்தி, மக்காச்சோளம் பயிருக்கு பணம் கிடைக்குமோ, கிடைக்காதோ என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us