sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

/

விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்


ADDED : மார் 13, 2024 12:57 AM

Google News

ADDED : மார் 13, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின் கீழ் மதுரை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடந்தது. 13 வட்டாரங்களில் இருந்து 25 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

வேளாண் துணை இயக்குநர் அமுதன் வரவேற்றார். இணை இயக்குநர் சுப்புராஜ் இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் பெறுவது பற்றியும், துணை இயக்குநர் மேரி ஐரின் ஆக்னிட்டா மண்வள அட்டை, உயிர் உரங்கள் பயன்பாடு குறித்தும், உதவி இயக்குநர் சக்திகணேஷ் உரம் பூச்சி மருந்து விற்பனை விதி முறை பற்றியும் பேசினர்.

வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் கல்லுாரி விஞ்ஞானிகள் விவசாயிகளிடம் கலந்துரையாடினர். விளைப் பொருட்களை சந்தைப்படுத்துவது, மாற்றுப்பயிர் திட்டம், இயற்கை வேளாண்மை, பூச்சிகளின் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகளை எடுத்துரைத்தனர். திருச்சி பயிர் பாதுகாப்பு அலுவலர்கள் தேசிய பூச்சி மற்றும் நோய் கண்காணிப்பு அமைப்பு செயலி பயன்படுத்தும் முறையை விளக்கினர். வேளாண் அலுவலர் முத்து லட்சுமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us